பிறந்த நாள், கல்யாணம் ,சாவு, எதிலாவது பாஸானது, எதையாவது வாங்கினது, சேர்ந்ததுக்கு, பிரிஞ்சதுக்கு இப்படி எல்லாத்துக்கும் பொதுவா ஒரு சடங்கு இருக்கு தெரியுமா..? வேறென்ன.. ‘குடி’க்கிறதுதான்.
குடிப்பது இப்போது ஒரு சமூகக் கடமை.
யாரும், எப்போதும், எங்கே வேண்டுமானாலும் குடிக்கலாம்; தப்பில்லை என்கிற மனோபாவத்திற்கு வந்துவிடுதலே நாகரீகமாகக் கருதப்படுகிறது.
அப்பாவும் பிள்ளையும் , அண்ணனும் தம்பியும் சேர்ந்தே குடிப்பது நமது நாகரீக வளர்ச்சியின் இன்னொரு அடையாளம்.
சாலையோரத்தில் நின்றபடியே ஊற்றிக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்வதை இயல்பாகப் பார்த்துக் கொண்டு கடந்துவிட முடிகிறது.
கல்விசாலைகள் அருகிலும், கோயில்கள் பக்கத்திலும், குடியிருப்புகளுக்கு நடுவிலும் அரசாங்கம் வெட்கமே இல்லாமல் சாராயம் விற்கிறது. அடுத்த சந்ததிகள் வரை தயக்கமே இல்லாமல் அதைக் குடித்து நாட்டின் வருவாயைப் பெருக்கி தேசபக்தியை காட்டிக்கொள்கிறது.
அத்து மீறும் ஒரு சமூகம், குடும்பம் பேணாத ஒரு தலைமுறை, குற்றங்கள் மீது ஆர்வம் கொண்ட இளையோர் என்று வளர்ந்து கொண்டிருப்பதை சுரணையில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களிடமிருந்து பிடுங்கி அதில் கொஞ்சத்தை இவர்களுக்கே ‘இலவசங்கள்’ வழங்கி ஓட்டுகளை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன அரசுகள்.
பிரபலமான நவீன இலக்கியவாதிகள் குடிப்பது எவ்வளவு ரசனைக்குரியது என்று நவீனங்கள் படைக்கிறார்கள். பிளாக் எழுதுகிறார்கள். வழிமுறைகள் சொல்லித்தருகிறார்கள். விசயங்கள் சந்தோசமாய் பின்பற்றப் பட்டு விடுகின்றன.
************
நேற்று அலுவலகத்தில் இருந்த போது ஜன்னல் வழியாக எதிரேத் தெரிந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. காற்றில் எழும்பி மலை முழுவதற்கும் அது பரவிக் கொண்டிருந்தது. புதர் மண்டி கிடக்கும் அந்த மலை பூமி சடசடவென்று அழிந்து கொண்டிருந்தது. அணைக்கமுடியவில்லை.
மாலை வீட்டுக்கு கிளம்புகிற போது அறியமுடிந்த செய்தி இதுதான்.
ஓரளவு, தீ ,மலை உச்சி நோக்கி நகர்ந்தபின் ஓடிவந்தார்களாம் நாலுபேர். பக்கத்துக் கல்லூரி மாணவர்கள். தலை முடியெல்லாம் தீயில் கருகி இருந்ததாம். விடுமுறையைக் கொண்டாட புதர் மறைவுக்குப் போனார்களாம். குடி போதையில் சிகரெட் பற்ற வைத்தவன் விட்டெறிந்த தீக்குச்சிக்குதான் மலை இரையாயிற்றாம்.
தீ எரியக் காரணமானவன் செம போதை. எழுந்து நிற்க முடியவில்லை. தீ சுற்றி பரவ பெருத்த உடம்பு கொண்ட அவனை தூக்கிவரவும் முடியாமல்… இவர்கள் மட்டும் தப்பிவிட.. தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொண்ட அவனை கரிக் கொட்டையாகத்தான் பார்க்க முடிந்தது.
Photo: google images



10 பகிர்வுகள்:
த.ம.2
சீரழிந்து கொண்டிருக்கிறது!
விதைத்தவன் அறுவடை செய்திருக்கிறான்..
மது அனைத்து பாவங்களினதும் ஆணி வேர். பாவங்களின் நஷ்டங்கள், இழப்புக்களினதும் ஆணி வேர்தான்...
குடிப்பவர்கள் தனி மனித ஒழுக்கம் பற்றி தெரியாதவர்கள் அல்ல, இருந்தும் அதை குடித்து மூத்திரமாய் விடுவதில் என்ன இருக்கிறது என்று தான் இன்று வரை எனக்கு புரியவில்லை... கற்று அறிந்தவர்களே குடிப்பதை உங்களுடன் சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்...
//சென்னை பித்தன்
த.ம.2
சீரழிந்து கொண்டிருக்கிறது!// வாங்க அண்ணாச்சி.வரவேற்புகள்.
//Mohamed Faaique says:
விதைத்தவன் அறுவடை செய்திருக்கிறான்..
மது அனைத்து பாவங்களினதும் ஆணி வேர். பாவங்களின் நஷ்டங்கள், இழப்புக்களினதும் ஆணி வேர்தான்...//
பக்குவப்படாத இளம்தலைமுறைகளுக்கு சகஜமாய் பரவிவருகிறது 'ஆணிவேர்'
//suryajeeva says:குடிப்பவர்கள் தனி மனித ஒழுக்கம் பற்றி தெரியாதவர்கள் அல்ல, இருந்தும் அதை குடித்து மூத்திரமாய் விடுவதில் என்ன இருக்கிறது என்று தான் இன்று வரை எனக்கு புரியவில்லை... கற்று அறிந்தவர்களே குடிப்பதை உங்களுடன் சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்...//
ஆதரவுக்கு நன்றி நண்பரே.
குடித்தல் தவறா என்கிற விவாதம் நிச்சயமாய் குடித்தல் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல. மறைந்து குடித்தல் அல்லது ஒளிந்து குடித்தல் என்பது ஒரு கால கட்டத்தில் இருந்தது இன்று வளர்ச்சி என்பது எல்லாரும் எப்போதும் என்கிற அளவுக்கு மாறிப் பொய் விட்டது. இது வளர்ச்சி என்பது குறித்த நமது புரிதலோடும் தொடர்புடையது. மேலும், இலவசங்களை அள்ளித் தர டாஸ் மாக் வருமானம் அரசுக்குத் தேவைப் படுகிறது. அவர்களே பற்ற வைத்து அவர்களே பின் அணைக்க முற்பட்டால் என்ன ஆகும். பற்றியெறியும் மலை போலத் தான்.
என்ன செய்வது நண்பரே
சரியாய் சொன்னீர்கள் அப்பு.
வருகைக்கு நன்றி வைரை சதிஷ்
Post a Comment