சொர்க்கத்திலிருந்த ஒருவனுக்கு மிகவும் அலுத்து போய் விட்டது. ‘என்ன இது உற்சாகம் இல்லாத,அமைதியான ஒரே மாதிரியான வாழ்க்கை!’ என்று சலிப்பு.
சொர்க்கத்திலிருந்து ஒரு நாள் மெல்ல எட்டிப் பார்த்தான்.
அங்கு தூரத்தில் ஒரு இடத்தில் நல்ல வெளிச்சத்தில்,பயங்கர கொண்டாட்டமாயிருந்தது. பார்ட்டி, டான்ஸ் என்று ஏரியாவே கலகலத்துக் கொண்டிருந்தது.
விசாரித்தால் அதுதான் நரகம் என்றார்கள்.ஓ.. நரகம் இவ்வளவு ஜாலியாக இருக்கிறதா? நான் அங்கேதான் போவேன் என்று சண்டை போட்டுக் கொண்டு விடாபிடியாக அங்கே போனான்.
ஜாலியாக இருக்கலாம் என்று போனவனை இரண்டு கிங்கரர்கள் அலேக்காக தூக்கிக் கொண்டு ஆயில் சட்டியில் போட்டார்கள்.
‘என்னடா இது அநியாயம்?’
‘அதுவா .. அதுதான் நாங்க லேட்டஸ்டா அறிமுகப் படுத்தியிருக்கிற விளம்பரம்.’
[ஒரு விளம்பர நிறுவன ஏட்டில் எப்போதோ படித்தது.]

0 பகிர்வுகள்:
Post a Comment